RSS

Friday, March 28, 2008

கரைந்தும் கரையாதவை..!!

கரைய துவங்கியது
கவித்துவ காலம்..!!
கவியத் துவங்கியது
கண்களில் சோகம்..!!

இருளத் துவங்கியது
இமைகளின் ஓரம்..!!
குவியத் துவங்கியது
தவிப்பின் காரம்..!!

இயங்கத் துவங்கியது
இரயிலடி சத்தம்..!!
துளிக்கத் துவங்கியது
விழியீர மிச்சம்..!!

கையசைக்கச் துவங்கியது
இதயத்தின் வேரும்...!!
மெய்யசைய மறுத்தது
என்மன தேரும்..!!
____________
-பூமகள்.

0 comments: