RSS

Monday, March 10, 2008

பனித்துளி..!!

வானவில் தந்து
நிறமிழந்த பனித்துளி
வாங்கினேன் மேகத்திடம்..!!

மழைக் கம்பி பிடித்து
மரங்களில் பாசியாகி
பச்சை வண்ணம் தொட்டு
நிறம் மாறி மகிழ்கிறது..!

செம்மண் பூமின்
சிவந்த மேனியில்
சிலிர்த்து இறங்கி
சிவப்பாடை
உடுத்திக் கொள்கிறது..!

கருசக்காட்டிலும்
களிமண் பூமியிலும்
சாம்பல் நிறம் பூசி
கருமையால் பொட்டிட்டு
புன்னகை பூக்கிறது..!!

எப்படி எப்படியோ
நிறம் மாறினாலும்
அதிகாலைப் பனியில்
நடுங்கிய புல்வெளியில்
நிறமின்றி ஜொலித்து
எதையோ என்னுள்
புரியவைக்கிறது..!!
__________________
~பூமகள்.

0 comments: