RSS

Wednesday, March 19, 2008

விழிப்பு கடந்து...!!

ஏக்கம் தொலைத்து
ஏகாந்தத்தில் எழுந்து
வெளிச்சம் பார்க்கிறேன்..!!

குயில்களின் சிறகடிப்பும்
குருவிகளின் கூவலும்
கன்னம் முழுக்க மஞ்சள்
தடவி சிவந்து சிரிக்கும்
கிழக்கின் கீழ் வானமும்...

கடிகார கூப்பாடில்
கனவு கலைந்து
சலித்துக் கொள்கிறேன்...
நூறாவது மாடியில்
மூச்சு முட்டும் வன்கட்டிட
முகப்புகளை கவலையோடு
பார்த்த வண்ணமே..!!


(இறுதி வார்த்தையில் துவங்கி சில நொடிகளில் எழுதிய கவிச்சமர் கவிதை..!)

__________________
~பூள்.

0 comments: