RSS

Tuesday, February 3, 2009

தவம்...!



நெடிய பிரிவுக்கு பின்
தாய் விரல் இறுகப் பற்றும்

மழலை போல

தொலைந்து போன

எழுத்துச் சுவடுகள்

தேடி வந்து

விரல் பிடித்து
உயிர்த்தெழ

காத்திருக்கின்றன..


தன் மழலை வாசம்

தாயறிவதைப் போல

என் எழுத்துகளின் வாசம்

நானறியத் தலைப்படுகிறேன்...


வெகு நாட்கள்

முக்காடு இட்டு
புழுதி படிந்து
உறங்கிய சுவடுகள்
அதன் மேனியெங்கும்
மழலை கதக்கிய
பால் வாசனையை நினைவூட்டின..!


மழலையால்
கலைத்து போடப்பட்ட
விளையாட்டு பொம்மை போல
ஆங்காங்கே சிதறிக்கிடக்கின்றன
கவிக்கருக்கள்..!


மறந்து போனாலும்
நினைவூட்டியபடியே இருக்கின்றன
என்றோ நட்டு வைத்த
நட்புப் பூக்கள்..


விடியலுக்காக ஏங்கும்
குருவிக் குஞ்சின் மனதைப் போல்
கவி வருகைக்காக ஏங்கித் தவிக்கும்
உள்ளத்தின் ஓர் பிம்பம்..!!


-பூமகள்.

0 comments: