
எதிரிகள் வாழ்க..!!
நெருப்பு நாவுகள்
சிரிப்போடு சாடுகையில்..
கரைக்கும் அமிலமாய்
சிறையிடும் வார்த்தைகள்..!
உணர்ந்தழுது வெதும்பி
கிடக்கையில்..
உள்ளத்தின் நாவசைந்து
மென்மையாய் உரையாடும்..!
முன்னாளில் பகைவரால்
வேல் பாய்ச்சிய
வசைகள் பல
தசை கிழித்து
உள வேர் முறுக்கிய
கதை படிக்கும்..!
கூர் ஊசி நூறு
உரசிப் போன
நெஞ்சமது..
இன்னாளின் இடரெல்லாம்
இம்மியளவாய் தோன்ற வைக்கும்..
துயர் கடந்து
லேசாகி மனம் மெல்ல
மேலெழும்பும்..
எல்லாம் தாங்கி
ஏற்றமதைக் காண
கற்பித்த எதிரியே - நீவீர்
வாழ்க வாழ்கவே...!
--- பூமகள்
0 comments:
Post a Comment