என்றுமே இறக்காதிருப்பேன்..
எழுத்துகளின் ஈரம்
என் ஆன்ம வேர் தீண்டும் வரையிலும்..
நல்லுறவுகளின் கீதம்..
என் மனச் சுவர்கள் முட்டும் வரையிலும்..
வல்லூறுகளின் வேசம்..
தூசாகி தீயில் பொசுங்கும் வரையிலும்..
காலங்கள் மாறினாலும்..
சூழல்கள் குழப்பினாலும்..
என்றுமே இறக்காதிருப்பேன்..
எழுதி விட்டுப் போன
ஒரு சில காகிதச் சிதறல்களிலேனும்...
0 comments:
Post a Comment