RSS

Wednesday, February 18, 2009

கண்ணாமூச்சி..!

காதலர் என்று
கண்ணாமூச்சியாடும்
இரவுக்கும் பகலுக்குமான
ஊடலில் சிக்கியபடியே
வாழ்க்கை..!

இருள் தோய்ந்த
நள்ளிரவின் கீறலில்
சிக்கிக் கொள்ளும்
சில நியாபகங்கள்..

கலங்கி கண்கள்
காலையில் படிக்கும்
நாளைய பொழுதின்
அவசரப் பாடம்..!

எத்தனை வலித்தாலும்
வாய் முழுக்க பல்லுடன்
சிரித்து வைக்கிறேன்...

நம் பேச்சு புரியாத
எதிர்வீட்டு குழந்தையை
பார்க்கும் போதெல்லாம்..!!
__________________
-- பூமகள்.

0 comments: