RSS

Friday, August 24, 2007

சிறு பூவிற்கு வாழ்த்து..!

ஆயிரம் பூக்கள்
இயைந்த மாலை
அழகாய் பிறந்து
வந்தது இன்றே..!

வசந்தகால
வனப்புகொண்டே
வாசமுடனே
வந்தது இன்றே..!

வாஞ்சை கொண்டே
வெள்ளி மின்னல்
வானம் விட்டே
வந்தது இன்றே..!

வாசல் தேடி
வானவில் கோடி
வண்ணவெள்ளமாய்
வந்தது இன்றே..!

வாழ்த்துக் கூறி
ஆசி வழங்க
அக்கா வந்தேன்
அன்பு கொண்டே..!

வாழ்வு முற்றும்
இன்பம் காண
இனிய வாழ்த்து
கூறினேன் நன்றே..!

வாழ்க நீ..!
வளர்க மேலும்..!
வானம் கூட
தொட்டுவிடும் தூரமே..!!

-பூமகள்.

0 comments: