![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEicdZJSdeJSISKsQxherqSJAKWhMU5zMN-1lpvMdeRqHJp_MW-mF5z4JQBwOazKvSTWDM4AgyecnI3WkO4crK2nVP85jscXa90l9RuJ-IdVO_3Q-S1Za4_KS2uyVznHBulOtpSGxPwITw/s400/%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.jpg)
காற்று வந்து
காது துடைத்து
கலைத்துப் போகும்
பஞ்சு மேகம்...!!
விண்ணில் கோடி
விதைகள் கொண்டு
விதைத்த பருத்தி
பஞ்சு மேகம்...!!
நட்சத்திர மழலை
கண்ணாமூச்சி ஆட
வைக்கும் பிஞ்சு
பஞ்சு மேகம்..!!
நனைந்த நிலவு
நுதல் முற்றும்
சுற்றிக் கொள்ளும்
பஞ்சு மேகம்...!!
பகலவன் கொஞ்சம்
இளைப்பாறிச் செல்லும்
சொகுசு பக்கணம்
பஞ்சு மேகம்...!!
கடலோடு
மணம் கொண்டு
கருவாகி
மழை ஈன்று
பஞ்சரிக்கும்
பஞ்சு மேகம்...!!
வானத்தோடு
மின்னல் சண்டை
அமைதித் தூது
வெளிர்
பஞ்சு மேகம்...!!
அண்டையோடு
சண்டையிட்டும்
அன்பு குழகி
ஆர்ப்பறிக்கும்
தரணி மெச்சும்
பஞ்சு மேகம்...!!
அர்த்தங்கள்:
பஞ்சரித்தல் - கொஞ்சிப் பேசுதல்
பக்கணம் - ஊர், கிராமம்
குழகுதல் - கொஞ்சுதல், வசீகரித்தல்
-பூமகள்.
0 comments:
Post a Comment