நங்கூரமிட்ட நிமிடங்கள்..
நகரும்மெல்ல நினைவலைகள்..
மழைத்தூரல் பட்டு
மனம் நனையும் விந்தை..
பனிக்காற்று படிந்து
வந்துசில்லிப்பூட்டும்
சின்ன உள்ளத்தை..
தண்டவாள தாளத்தோடே
ஒய்யார நினைவோட்டம்..
வெளிச்ச மின்மினிகளாய்
ஆங்காங்கே தெரியும்
அகங்கள் அழகே..
சன்னலோர பயணத்துக்கு
ஈடில்லையென்றுணர்த்தும்..
கவிகள் பல ஆக்கும்
அந்த பயணத்தின் ஆரம்பமே..
துணைக்கு வரும் நிலவு மட்டும்
துடைத்து விடும் இரவை மெல்ல..
தூக்கத்தை விடுத்து
தூரவானம் பார்த்தபடி
சொர்க்கம் எட்டும்
சன்ன எண்ணோட்டம்..
தாயின் மடியில்
துய்த்த நினைவை
திரும்ப வைக்கும்
தாய்த்தொடர்வண்டி....!!
-பூமகள்.
0 comments:
Post a Comment