RSS

Friday, August 24, 2007

வெளிச்சம் தேடி....!!

இருட்டு அப்பிய
இரவு நேரம்..

அலையும் தூங்கும்..
அந்திச் சாமம்..

ஆழ்கடல் அருகே..
தனியே பயணம்
துடிப்பே துணையாய்..

உப்புக் காற்றும்
உவர்ப்புக் கொண்டே
உறங்கும் மெல்ல..

வெள்ளிப் பரள்கள்
வான முகட்டில்
வந்து வந்து
வெளிச்சம் காட்டும்...!!

விண்ணில்
நகபதி நகர்வலம்..
நட்சத்திரத் திருவிழா..!!

வெளிச்சம் பிடிக்க..
வலையை வீசியேன்..
விண்ணை நோக்கி....

முகிலில் மறைந்த
விண்மீன்கள்..
வலையில் சிக்கின
வண்ண மீன்களாய்..!!


-பூமகள்.

0 comments: