அர்த்தங்கள்
அறியும்
வேட்கையில்
நான்...!!
* பூவின்
மகரந்தம்
திருடும்
தென்றல்
மெல்ல
எனை
வருடும் போதும்....
*புதுச்சட்டை
போட்ட
ஏழைச்
சிறுவனின்
சிரிப்பைப் போல
வானம்
மழையால்
நகையாடும் போதும்....
* மழையில்
நனையும்
குருவிக்குஞ்சை
சுருக்கென
இறகால்
பொத்தும்
தாய்க்குருவியின்
கதகதப்பின் போதும்....
* நாளைய
விடியலை
நம்பிக்கையோடு
பார்த்திருக்கும்
இரவு
உறங்கும் போதும்....
* சற்றே
முகம்
வாடினது
காணாமல்
வாஞ்சையாய்
கை பற்றி
அனுசரிக்கும்
ஸ்நேகத்தின் போதும்....
துளித்துளியாய்
அறிகின்றேன்..
வாழ்வின்
அர்த்தத்தை....!!
- பூமகள்.
0 comments:
Post a Comment